வெக்கையும் நினைவும்..


விரல் நுனி வெடித்து
சிந்தனையின் பிம்பம் சிதறியபடி
வெளித்து வெளுப்பது வெய்யிலன்று
பந்தங்களும் பாசங்களும்.

மரத்திற்கு பதிலாய் இங்கு
பட்டு போக பாலைவனத்தில்,
வெறிச்சோடிய மன பரப்பில்
நிரம்பிய வெக்கையும்
வறண்ட நினைவுகளுமாய்...

இரவீ -

பரவசம்..

        
           
            ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும்
             புது பிரசவத்தின் பரவசம்  _  என்
             பழைய கவிதை வரிகளில்.....
         
           

            

புகைப்படங்கள்